செய்திகள்
இலங்கையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தமிழகத்துக்கும் குறிவைத்தனர்
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவு பெற்ற தீவிரவாத இயக்கம் சதி திட்டம் தீட்டி உள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. #Srilankablast #TN
சென்னை:
கிறிஸ்தவ தேவாலயங்களை குறி வைத்து மிகப்பெரிய தாக்குதல் சம்பவத்துக்கு சதித்திட்டம் நடப்பதாகவும், இதற்காக தமிழகத்தில் இளைஞர்கள் சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த வாலிபர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால் அசம்பாவித சம்பவங்களை நிகழ்த்துவது சாத்தியமில்லை என்று மூளைச்சலவை செய்யப்பட்ட இளைஞர்கள் கைவிரித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தமிழக கிறிஸ்தவ ஆலயங்களுக்கு தீவிரவாதிகள் குறிவைத்திருக்கும் திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக கடந்த 6 மாதத்துக்கு முன்பே என்.ஐ.ஏ. அமைப்பினர் எச்சரிக்கை விடுத்து அறிக்கையும் அளித்துள்ளனர். இதையடுத்து உளவுப்பிரிவு போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
புதிய தீவிரவாத அமைப்பின் இலக்கு, ஏதாவது ஒரு இடத்தில் கிறிஸ்தவ தேவாலயத்தில் தாக்குதல் நடத்துவது தான் என்று கூறப்படுகிறது. இதற்காக அவர்கள் இலங்கையை தேர்ந்தெடுத்துள்ளனர்.
அந்த நாட்டில் விடுதலைப் புலிகளின் பின்னடைவுக்கு பின்னர் இலங்கையில் திரும்பிய அமைதி மற்றும் பாதுகாப்பு குறைபாடுகளை புதிய தீவிரவாத இயக்கம் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டுள்ளது.
இலங்கையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சில சிறிய அளவிலான குண்டுவெடிப்பு சம்பவங்கள் அரங்கேறின. அப்போதே இந்திய உளவு துறை இலங்கையை உஷார்படுத்தியது. ஆனால் அந்த நாடு இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் பாதுகாப்பு விஷயத்தில் கோட்டைவிட்டதாலேயே மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேர்ந்துள்ளது. #Srilankablast #TN
நியூசிலாந்தில் மசூதி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பழிவாங்கும் வகையிலேயே குறிப்பிட்ட தீவிரவாத இயக்கம் உலக நாடுகளின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்புவதற்காக இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. தேசிய புலனாய்வு முகமை வட்டாரங்கள் இந்த தகவலை தெரிவித்தன.
தமிழகத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்படுபவர்களை கண்காணிக்கும் பணியில் தேசிய புலனாய்வு பிரிவு படையினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். கடந்த 6 மாதத்துக்கு முன்பு தமிழகத்தில் பிடிபட்ட ஐ.எஸ். ஆதரவாளர் ஒருவர் இலங்கையில் குண்டு வைத்துள்ள தீவிரவாத இயக்கம் பற்றி திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால் அசம்பாவித சம்பவங்களை நிகழ்த்துவது சாத்தியமில்லை என்று மூளைச்சலவை செய்யப்பட்ட இளைஞர்கள் கைவிரித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தமிழக கிறிஸ்தவ ஆலயங்களுக்கு தீவிரவாதிகள் குறிவைத்திருக்கும் திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக கடந்த 6 மாதத்துக்கு முன்பே என்.ஐ.ஏ. அமைப்பினர் எச்சரிக்கை விடுத்து அறிக்கையும் அளித்துள்ளனர். இதையடுத்து உளவுப்பிரிவு போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
புதிய தீவிரவாத அமைப்பின் இலக்கு, ஏதாவது ஒரு இடத்தில் கிறிஸ்தவ தேவாலயத்தில் தாக்குதல் நடத்துவது தான் என்று கூறப்படுகிறது. இதற்காக அவர்கள் இலங்கையை தேர்ந்தெடுத்துள்ளனர்.
அந்த நாட்டில் விடுதலைப் புலிகளின் பின்னடைவுக்கு பின்னர் இலங்கையில் திரும்பிய அமைதி மற்றும் பாதுகாப்பு குறைபாடுகளை புதிய தீவிரவாத இயக்கம் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டுள்ளது.
இலங்கையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சில சிறிய அளவிலான குண்டுவெடிப்பு சம்பவங்கள் அரங்கேறின. அப்போதே இந்திய உளவு துறை இலங்கையை உஷார்படுத்தியது. ஆனால் அந்த நாடு இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் பாதுகாப்பு விஷயத்தில் கோட்டைவிட்டதாலேயே மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேர்ந்துள்ளது. #Srilankablast #TN