செய்திகள்

ராஜஸ்தானில் சோகம் - சுற்றுலா சென்ற பள்ளிக்கூட கார் லாரி மீது மோதி 8 பேர் பலி

Published On 2018-10-13 10:49 GMT   |   Update On 2018-10-13 10:49 GMT
ராஜஸ்தானில் சுற்றுலா சென்ற பள்ளிக்கூட கார் லாரியுடன் மோதிய விபத்தில் மாணவிகள் உள்பட 8 பேர் பரிதாபமாக பலியாகினர். #Accident
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் உள்ள சலும்பர் நகரை சேர்ந்தவர்கள் ஒரு காரில் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர்.

கைராட் பகுதியில் சென்றபோது அந்த கார் முன்னால் சென்ற லாரி மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 3 மாணவிகள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், ஆசிரியர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பள்ளியில் இருந்து சுற்றுலா சென்ற போது விபத்து ஏற்பட்டு 8 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Accident
Tags:    

Similar News