செய்திகள்
கோப்புபடம்

வேதாரண்யம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - ரே‌ஷன் கடை ஊழியர் கைது

Published On 2021-06-07 10:03 GMT   |   Update On 2021-06-07 10:03 GMT
வேதாரண்யம் அருகே உறவினர் வீட்டில் தங்கி இருக்கும் பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ரேஷன் கடை ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு காவல் சரகம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 46). இவர் அதே ஊரில் ரே‌ஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அதே ஊரை சேர்ந்த வேதாரணயத்தில் படித்து கொண்டு தலைஞாயிறில் பெரியம்மா வீட்டில் தங்கி இருக்கும் பிளஸ்-1 மாணவியை பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதா கவும் மிரட்டியுள்ளாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் சரக போலீஸ் துணை கண்காணிப்பாளர் மகாதேவன் அறிவுரையின்படி வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பொறுப்பு சுப்ரியா வழக்குப்பதிவு செய்து செந்தில்குமரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

மாணவி மருத்துவ பரிசோதனைக்கு பின் பெரியம்மாவுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

Tags:    

Similar News