செய்திகள்
முக ஸ்டாலின்

பயிர் காப்பீடு- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

Published On 2021-07-29 08:42 GMT   |   Update On 2021-07-29 08:42 GMT
பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் காப்பீடு கட்டணத்தில் மத்திய அரசின் பங்களிப்பை முன்பிருந்தபடியே மாற்றியமைக்க வேண்டும்.
சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

* பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் காப்பீடு கட்டணத்தில் மத்திய அரசின் பங்களிப்பை முன்பிருந்தபடியே மாற்றியமைக்க வேண்டும்.

* உயர்ந்தபட்ச விகிதத்தை நிர்ணயிக்கும் முறையை நீக்கி விவசாயிகளின் நலனை கருத்தில் கொள்ள வேண்டும்.



* முன்பிருந்தபடி 49:49:2 என்ற விகிதத்தில் காப்பீட்டு கட்டண பங்கை மாற்றியமைக்க வேண்டும்.

* மத்திய அரசின் முடிவால் மாநில அரசின் பங்கு 239% அளவிற்கு அதாவது ரூ.1,918 கோடியாக அதிகரித்துள்ளது.

* மத்திய அரசின் இந்த நடவடிக்கை இத்திட்டத்தின் நோக்கத்தையே முடக்கி உள்ளது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Tags:    

Similar News