உள்ளூர் செய்திகள்
கைது

திருவள்ளூர் அருகே கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த ஒருவர் கைது

Published On 2022-01-11 08:29 GMT   |   Update On 2022-01-11 08:29 GMT
திருவள்ளூர் அருகே கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் தரணேஸ்வரி தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணி ஈடுபட்டனர்.அப்போது பெரியபாளையம்-சென்னை நெடுஞ்சாலையில் தானாகுளம் கிராமத்திலுள்ள ஒரு தனியார் நிறுவனம் அருகே ஒருவர் நின்று கொண்டு இருந்தார். அவர் போலீசாரை பார்த்ததும் ஓட்டம் பிடித்தார். அவரை விரட்டி பிடித்து சோதனை செய்ததில் அவரிடம் இருந்த 50 கிராம் கஞ்சா சிக்கியது.பின்னர் அவரை கைது செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். போலீசார் விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த மன்ஜீத்கேவிட் (வயது 40) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்
Tags:    

Similar News