செய்திகள்
விபத்து

நாங்குநேரி அருகே விபத்தில் வாலிபர் பலி

Published On 2019-09-22 17:26 GMT   |   Update On 2019-09-22 17:26 GMT
நாங்குநேரி அருகே சாலை விபத்தில் சிக்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை:

நாங்குநேரி அருகே உள்ள பானான்குளம் கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்தவர் இசக்கி. விவசாயி. இவரது மகன் கணேசன் (வயது 19). சம்பவத்தன்று அங்குள்ள சாலையில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பலியானார். 

இது குறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News