ஆன்மிகம்
பூங்காவன முத்துமாரியம்மன் கோவில் திருவிழா

பூங்காவன முத்துமாரியம்மன் கோவில் திருவிழா

Published On 2021-04-05 07:15 GMT   |   Update On 2021-04-05 07:15 GMT
பூங்காவன முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் 101 தீச்சட்டி எடுத்து கோவிலை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்புவனம் அருகே லாடனேந்தல், அருள்சக்திபுரத்தில் பூங்காவன முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 41 அடி நீளத்தில் சயன கோலத்தில் மகாசக்தி மாசாணியம்மன் சிலையும் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 28-ந்தேதி பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. 6-ம் நாள் நிகழ்ச்சியாக கோவில் நிர்வாகி நாகராணி அம்மையார் 21 தீச்சட்டி எடுத்து அலங்கார ரதம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பிறகு 101 தீச்சட்டி எடுத்து கோவிலை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன்பின்னர் பக்தர்கள் மாவிளக்கு எடுத்தல், கரும்பு தொட்டில் எடுத்தல், கிடா வெட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பூசாரி மாரிமுத்து தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News