ஆன்மிகம்
மண்டைக்காட்டில் மாசி கொடை விழாவில் வெள்ளி பல்லக்கில் பகவதி அம்மன் பவனி வந்த போது எடுத்த படம்.

மண்டைக்காட்டில் மாசி கொடை விழா: வெள்ளி பல்லக்கில் பகவதி அம்மன் பவனி

Published On 2021-03-03 07:51 GMT   |   Update On 2021-03-03 07:51 GMT
மண்டைக்காட்டில் மாசி கொடை விழாவில் வெள்ளி பல்லக்கில் பகவதி அம்மன் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் நடைபெறும் விழாக்களில் மாசி கொடை விழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு மாசி கொடை விழா கடந்த 28-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழா வருகிற 9- ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

விழாவின் 3-ம் நாளான நேற்று காலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, காலை 5.30 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷ பூஜை, காலை 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

மதியம் 12.30 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 4.15 மணிக்கு கீழ்கரை பிடாகையில் இருந்து சந்தன குடம் பவனியும், மாலை 6.15 மணிக்கு அம்மனுக்கு சந்தனகாப்பும், 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் நிகழ்ச்சியும் நடந்தது.

ஆறாம் நாள் இரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் வலிய படுக்கை எனும் மகாபூஜையும், 9-ம் நாள் இரவு 9.30 மணிக்கு பெரிய சக்கர தீவெட்டியுடன் அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனியும் நடக்கிறது,

10-ம் நாள் அதிகாலை 2 மணிக்கு ஸ்ரீகண்டன் சாஸ்தா கோவிலில் இருந்து களப பவனி, 3.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி, 5.30 மணிக்கு பூமாலை, பகல் 12 மணிக்கு குத்தியோட்டம், மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு இரவு 9.30 மணிக்கு அம்மன் பவனியும், நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பவனி, தொடர்ந்து 1 மணிக்குள் ஒடுக்கு பூஜை நடக்கிறது.

விழா நாட்களில் தினமும் காலை 6.30 மணி, மதியம் 1 மணி, மாலை 6.30 மணி இரவு 9 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில் நிர்வாகத்தினர் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News