ஆன்மிகம்
பட்டிவீரன்பட்டியில் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா

பட்டிவீரன்பட்டியில் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா

Published On 2021-04-23 03:08 GMT   |   Update On 2021-04-23 03:08 GMT
பட்டிவீரன்பட்டியில் பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி அம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அம்மன் பூஞ்சோலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பட்டிவீரன்பட்டியில் பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சித்திரை திருவிழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்று அம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அம்மன் பூஞ்சோலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

கொரோனா பரவல் காரணமாக புலிஆட்டம், ஒயிலாட்டம், கலை நிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கை, சிறப்பு அன்னதானம், பொதுவிருந்து ஆகிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. விழாவில் பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News