உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி கழிவறையில் வழுக்கி விழுந்து தொழிலாளி பலி

Published On 2022-01-12 09:21 GMT   |   Update On 2022-01-12 09:21 GMT
தூத்துக்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்த தொழிலாளி ஒருவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு அங்குள்ள கழிவறைக்கு சென்றபோது வழுக்கி விழுந்து பலியானார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி அம்பேத்கர்நகரை சேர்ந்தவர் பாலதாசன் (வயது 40). தொழிலாளி. 

இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
 
இந்நிலையில் நேற்று இரவு கழிவறைக்கு சென்றபோது வழுக்கி விழுந்து படுகாயமடைந்தார். தொடர்ந்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
 
ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News