ஆன்மிகம்
பழனி முருகன் கோவில் மின்இழுவை ரெயில்நிலையம் பகுதியில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததை படத்தில் காணலாம்

பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

Published On 2019-10-08 06:22 GMT   |   Update On 2019-10-08 06:22 GMT
வாரவிடுமுறை, ஆயுதபூஜை என தொடர் விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். அது மட்டுமின்றி சுபமுகூர்த்தம், மாதபிறப்பு, திருக்கார்த்திகை, வார விடுமுறை, பள்ளி விடுமுறை நாட்களிலும் பழனிக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.அந்தவகையில் நேற்று வாரவிடுமுறை நாளாகும். மேலும் இன்றும், நாளையும் ஆயுதபூஜை, விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று காலை முதலே பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். இதனால் கிரிவீதி, சன்னதிவீதி, திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

இந்நிலையில் ரோப்கார் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அதன் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. எனவே மின்இழுவை ரெயில்நிலையத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து மலைக்கோவிலுக்கு சென்றனர். மேலும் பொது, கட்டளை, கட்டண தரிசனம் உள்ளிட்ட அனைத்து தரிசன வழிகள், மலைக்கோவில் வெளிப்பிரகாரம் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. இதனால் சுமார் 3 மணி நேரம் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News