செய்திகள்
கோப்புபடம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: 2 வீர‌ர்களுக்கு கொரோனா

Published On 2021-07-18 03:29 GMT   |   Update On 2021-07-18 03:29 GMT
ஒலிம்பிக் கிராமத்தில் தங்கவைக்கப்பட்டு இருப்பவர்களுக்கு நடத்தப்பட்ட வழக்கமான பரிசோதனையில் வெளிநாட்டை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதையடுத்து அந்த நபர் ஓட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்.
டோக்கியோ: 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இன்னும் 5 நாட்களில் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்காக ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகள், அதிகாரிகள் அடங்கிய அணி ஜப்பானை நோக்கி படையெடுத்த வண்ணம் இருக்கிறது. போட்டியில் பங்கேற்பவர்கள் தங்குவதற்கு நவீன வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் கிராமம் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. கொரோனா பரிசோதனைக்கு பிறகு ஒவ்வொரு அணியினரும் ஒலிம்பிக் கிராமத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் அறையில் தங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் ஒலிம்பிக் கிராமத்தில் தங்கவைக்கப்பட்டு இருப்பவர்களுக்கு நடத்தப்பட்ட வழக்கமான பரிசோதனையில் வெளிநாட்டை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அந்த நபர் ஓட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். கொரோனாவினால் ஒருவர் பாதிக்கப்பட்டு இருக்கும் தகவலை வெளியிட்டு இருக்கும் போட்டி அமைப்பு குழுவினர் அவர் யார்? என்பது குறித்து எந்தவித விவரத்தையும் வெளியிடவில்லை. 

ஒலிம்பிக் வீரர்கள் தங்கிய ஓட்டல் ஊழியர்களுக்கு கொரோனா, போட்டி அமைப்பு குழுவினர் ஏற்பாடு செய்து கொடுத்த இடத்தில் தங்கியவருக்கு கொரோனா பாதிப்பு என்று செய்திகள் வெளியான நிலையில் முதல்முறையாக ஒட்டு மொத்த வீரர்களும் தங்கும் ஒலிம்பிக் கிராமத்திலேயே கொரோனா தொற்று ஊடுருவி இருப்பது பரபரப்பையையும், அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தநிலையில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக அமைக்கப்பட்டுள்ள கிராமத்தில் 2 வீர‌ர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
Tags:    

Similar News