ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி சியாஸ்

ரி-பேட்ஜ் செய்யப்படும் மாருதி கார்

Published On 2021-04-19 09:41 GMT   |   Update On 2021-04-19 09:41 GMT
மாருதி சுசுகி நிறுவனத்தின் சியாஸ் மாடல் கார் புது மாற்றங்களுடன் டொயோட்டா பிராண்டிங் பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


மாருதி சுசுகி சியாஸ் மாடலை டொயோட்டா ரி-பேட்ஜ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. யாரிஸ் செடான் மாடலுக்கு மாற்றாக சியாஸ் ரி-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் இரு நிறுவனங்கள் கூட்டணியில் வெளியாகும் மூன்றாவது மாடலாக இது இருக்கும்.



இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில், சியாஸ் மாடல் கிரிலில் டொயோட்டா பேட்ஜ் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதை கொண்டு டொயோட்டா நிறுவனம் சியாஸ் மாடலை ரி-பேட்ஜ் செய்யலாம் என கூறப்படுகிறது.

தற்போது செடான் பிரிவில் டொயோட்டா நிறுவனம் யாரிஸ் மாடலை விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் சியாஸ் ரி-பேட்ஜ் செய்யப்பட்ட மாடல் அறிமுகமாகும் பட்சத்தில் யாரிஸ் விற்பனை இந்திய சந்தையில் நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News