உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

அளவுக்கு அதிகமாக மது குடித்த 2 பேர் சாவு

Published On 2022-05-05 06:33 GMT   |   Update On 2022-05-05 06:33 GMT
அளவுக்கு அதிகமாக மது குடித்த தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
புதுச்சேரி:

காட்டேரிக்குப்பம் அருகே தேத்தாம்பாக்கத்தை சேர்ந்தவர் சரண்ராஜ் (வயது34). இவர் அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இவர் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு கொடாத்தூரை சேர்ந்த சத்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இதற்கிடையே கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சத்யா இறந்து விட்டதால் அவரது சகோதரி மகாலட்சுமியை சரண்ராஜ் 2-வது திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் சரண்ராஜ் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதனால் தங்குவதற்கு இடம் பற்றாக்குறையாக இருந்ததால் மகாலட்சுமி தனது குழந்தை மற்றும்  சகோதரி குழந்தையுடன் கொடாத்தூரில் உள்ள தாய் வீட்டில் இருந்து வந்தார்.

மது குடிக்கும் பழக்கமுள்ள சரண்ராஜ் தினமும் இரவு மது குடித்து விட்டு புதிதாக வீடு கட்டும் இடத்தில் தங்குவது வழக்கம். அதுபோல் நேற்று முன்தினம் இரவு மது குடித்து விட்டு சரண்ராஜ் வீடு கட்டும் இடத்தில் படுத்து தூங்கினார்.  வெகுநேரமாகியும் சரண்ராஜ் எழுந்திருக்க வில்லை. அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது சரண்ராஜ் இறந்து கிடப்பதை கண்டனர்.
அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து சரண்ராஜியின் தந்தை கந்தன் கொடுத்த புகாரின் பேரில் காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுவை அரும்பார்த்தபுரம் வி.ஐ.பி. நகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி யமுனாபாய். இவர்களது மகன் அன்பழகன்(வயது38). இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவை சேர்ந்த மீனு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.  இதற்கிடையே  குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 6ஆண்களுக்கு முன்பு அன்பழகன் மனைவி மற்றும் குழந்தையை பிரிந்து தாய் வீட்டில் இருந்து வந்தார். 

மனைவி-குழந்தைைய பிரிந்து வந்த வேதனையில் அன்பழகன் மது குடிக்க தொடங்கினார். அளவுக்கு அதிகமாக அன்பழகன் மது குடித்து வந்ததால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரை குடும்பத்தினர் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். அங்கு அறுவை சிகிச்சை  செய்த பின்னர்  அன்பழகன் வீட்டிலேயே இருந்து வந்தார். ஆனாலும் தொடர்ந்து அவர் மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திடீரென அன்பழகன் உடல்நிலை மோசமாகி பேச்சுமூச்சியின்றி கிடந்தார். சிறிது நேரத்தில் அவர் இறந்து போனார். அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் அன்பழகன் இறந்து போனதாக தெரிகிறது.

இதுகுறித்து அவரது தாய் யமுனாபாய் கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News