உள்ளூர் செய்திகள்
திருத்தணி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது
திருத்தணி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்தணி:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி-சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்தவர் கண்ணண். இவரது மகன் சுபாஷ் (வயது 20). இவர் திருத்தணி ரெயில் நிலையத்திலிருந்து வீட்டிற்கு சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 3 பேர் சுபாசை வழிமறித்து இரும்பு கம்பியை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பின்னர் அவரிடமிருந்த செல்போன் மற்றும் ரூ.500-யை பறித்துக்கொண்டு தப்பியோடினர். இது குறித்து சுபாசின் தந்தை திருத்தணி போலீசாரிடம் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை மேற்கொண்டதில் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் திருத்தணி ஸ்டாலின் நகரை சேர்ந்த குமரேசன் (22), இந்திராநகர் பகுதியை சேர்ந்த விஷ்ணு (22) மற்றும் பகிரதன் (22) என்பது தெரிந்தது. 3 பேரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.