ஆன்மிகம்
பாண்டுரங்க பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம்
புதுச்சத்திரம் பாண்டுரங்க பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சத்திரம் அருகே பெரியப்பட்டு கிராமத்தில் பிரசித்தி பெற்ற ரகுமாயி சமேத பாண்டுரங்க பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசிமாதம் தெப்ப உற்சவம் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தெப்ப உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி மாலை 6 மணிக்கு ரகுமாயி சமேத பாண்டுரங்க பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு ரகுமாயி சமேத பாண்டுரங்க பெருமாள் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதன்பிறகு இரவு 9 மணியளவில் ரகுமாயி சமேத பாண்டுரங்க பெருமாள் கோவில் குளத்தில் உள்ள அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினார். இதையடுத்து தெப்ப உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 10 மணிக்கு சாமி வீதி உலா நிகழ்ச்சி நடந்தது, இதில் பெரியப்பட்டு உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை பெரியப்பட்டு கிராம மக்கள் செய்திருந்தனர்.
அதன்பிறகு இரவு 9 மணியளவில் ரகுமாயி சமேத பாண்டுரங்க பெருமாள் கோவில் குளத்தில் உள்ள அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினார். இதையடுத்து தெப்ப உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 10 மணிக்கு சாமி வீதி உலா நிகழ்ச்சி நடந்தது, இதில் பெரியப்பட்டு உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை பெரியப்பட்டு கிராம மக்கள் செய்திருந்தனர்.