செய்திகள்
கொரோனா உயிரிழப்பு

கொரோனாவால் உயிரிழந்தோர் இறுதிச்சடங்கிற்கு ரூ.15 ஆயிரம் வழங்க ஆந்திர அரசு அனுமதி

Published On 2021-05-16 17:57 GMT   |   Update On 2021-05-16 17:57 GMT
கொரோனாவால் இறந்தோரின் இறுதிச்சடங்கிற்கு ரூ.15 ஆயிரம் வழங்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஆந்திர அரசு அனுமதி அளித்துள்ளது.
விசாகப்பட்டினம்:

ஆந்திர பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை இதுவரை 14 லட்சத்து 35 ஆயிரத்திற்கும் கூடுதலாக உள்ளது. அவர்களில் 12 லட்சத்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா வைரசால் பாதிப்பு ஏற்பட்டு இதுவரை 9,372 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இந்நிலையில், ஆந்திர பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பவர்களின் இறுதிச்சடங்கிற்கு உதவியாக தலா ரூ.15 ஆயிரம் வழங்குவதற்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News