உள்ளூர் செய்திகள்
ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள கஞ்சா மூட்டைகள் பறிமுதல்
வேதாரண்யத்தில் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள கஞ்சா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம், மணியன்தீவு கடற்கரைக்கு தெற்கே கோடியக்காடு, முனங்காட்டுக்கு வடக்கு பகுதியில் கடற்கரையில் பிரிந்த நிலையில் சாக்குமூட்டை ஒதுங்கியிருப்பதாக வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் கடலோர காவல் குழும போலீஸ் துணை கண்காணிப்பாளர் குமார், இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது கிழிந்த நிலையில் காணப்பட்டதை கைப்பற்றி பார்த்ததில் அதில் 2 கிலோ எடைக் கொண்ட 18 கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை கைப்பற்றி போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் மதிப்பு சுமார் ரூ.1.50 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த கஞ்சா மூட்டை இலங்கைக்கு கடத்தி செல்லும் போது படகிலிருந்து தவறி விழுந்து கரை ஒதுங்கியதா அல்லது ஏற்றுமதி செய்யும் போது தவறியதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.