செய்திகள்
விபத்து பலி

வாகனம் மோதி தொழிலாளி பலி

Published On 2021-07-20 11:50 GMT   |   Update On 2021-07-20 11:50 GMT
வாகனம் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொம்மிடி:

சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள வாழவந்தி கீரைக்காடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 30). தச்சுத்தொழிலாளி. இவர் பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஆவாரங்காட்டூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து விட்டு நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் மீண்டும் ஊருக்கு சென்றார். அலமேலுபுரம் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த ஒரு வாகனம் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News