செய்திகள்
குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று
வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்தபோது, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோய்க்கான எந்த அறிகுறியும் இல்லாத நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவரது மனைவிக்கு பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது.