ஆன்மிகம்
சோலைமலை முருகன் கோவிலில்காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி

சோலைமலை முருகன் கோவிலில் காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி

Published On 2021-01-22 03:03 GMT   |   Update On 2021-01-22 03:03 GMT
சோலைமலை முருகன் கோவிலில் மேளதாளங்கள், வேத மந்திரங்கள் முழங்க காமதேனு வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி புறப்பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம் அழகர்மலை உச்சியில் உள்ளது ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவில். இங்கு கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூச திருவிழா தொடங்கியது.

அன்று பூத வா கனத்திலும், 20-ந் தேதி அன்னவாகனத்திலும், நேற்று 21-ந் தேதி மாலையில் மேளதாளங்கள், வேத மந்திரங்கள் முழங்க காமதேனு வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி புறப்பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News