செய்திகள்
கோப்புபடம்

ஏற்றுமதியாளர்களுடன் வங்கி அதிகாரிகள் ஆலோசனை

Published On 2021-10-24 03:59 GMT   |   Update On 2021-10-24 03:59 GMT
திருப்பூர் தொழில்துறையினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியன் வங்கி தயாராக உள்ளது.
திருப்பூர்: 

இந்தியன் வங்கி சார்பில் ஏற்றுமதியாளர் சந்திப்பு கூட்டம் திருப்பூரில் நடந்தது. இதில் வங்கியின் செயல் இயக்குனர் செனாய் விஸ்வநாதன் தலைமை வகித்து ஏற்றுமதியாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் அவர் பேசியதாவது: 

வாடிக்கையாளர்களின் வலிமையான நம்பிக்கையால் வங்கி வளர்ச்சியடைந்து வருகிறது. அனைத்து தரப்பு வாடிக்கையாளர், தொழில்முனைவோரை ஈர்க்க அவர்களுக்கு தேவையான புதிய கடன் திட்டம், சலுகைகளை தர வங்கி தயாராக உள்ளது. 

நேரடியாக வாடிக்கையாளர்கள் வங்கி நிர்வாகத்திடம் பேச வசதியாக பிரத்யேக இலவச அழைப்பு எண் இ-மெயில் வசதி வழங்கப்படும். ஒவ்வொரு அலுவலரின் செல்போன் எண் தெரிவிக்கப்படும். குறைகள் இருந்தால் நேரடியாக எந்நேரமும் தெரிவிக்க வசதி ஏற்படுத்தப்படும். 

திருப்பூர் தொழில்துறையினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியன் வங்கி தயாராக உள்ளது. இக்கட்டான கால கட்டத்தை கடந்து முன்னேற்றத்தை நோக்கி பயணித்து வரும் வேளையில், தேவையான பொருளாதார உதவியை வங்கி செய்து தரும் என்றார்.
Tags:    

Similar News