செய்திகள்
மருதாநதி அணை

மருதாநதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

Published On 2019-11-08 05:02 GMT   |   Update On 2019-11-08 05:02 GMT
திண்டுக்கல் மருதாநதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடும்படி முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை:

வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவில் உள்ள மருதாநதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில், அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடும்படி விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன. இதனை ஏற்று, மருதாநதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடும்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மருதாநதி அணையில் இருந்து நாளை முதல் 90 நாட்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என முதல்வர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அணையின் ஆயக்கட்டு பகுதியில் உள்ள 6583 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
Tags:    

Similar News