செய்திகள்
சின்னதுரை

ஆத்தூர் அருகே விவசாயியை தாக்கி ரூ.55 லட்சம் வழிப்பறி

Published On 2019-12-03 15:07 GMT   |   Update On 2019-12-03 15:07 GMT
ஆத்தூர் அருகே இன்று விவசாயியை தாக்கி ரூ.55 லட்சத்தை 6 பேர் கும்பல் வழிப்பறி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தலைவாசல் நாவக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 38). விவசாயி. இவர் சென்னையில் வசிக்கும் தனது உறவினர் ஒருவர் வீட்டில் இருந்து 55 லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு ஊருக்கு செல்வதற்காக சேலம் செல்லும் பஸ்சில் ஏறினார்.

தலைவாசல் டோல் கேட்டில் பஸ்சில் இருந்து இறங்கி, சின்னதுரை அங்கு நிறுத்தியிருந்த தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நத்தக்கரை- ஊனத்தூர் ரோட்டில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கும்பல், சின்னதுரை மோட்டார் சைக்கிளை வழிமறித்தது. பின்னர், கத்தியை காட்டி மிரட்டி சரமாரியாக தாக்கி, அவரிடம் இருந்த ரூ.55 லட்சத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டது. 

மர்ம கும்பல் தாக்கியதில் காயம் அடைந்த சின்னதுரையை, பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தலைவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த வழிப்பறி சம்பவம் ஆத்தூர், தலைவாசல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News