செய்திகள்
விபத்து பலி

சேந்தமங்கலம் அருகே வாகனம் மோதி தொழிலாளி பலி

Published On 2021-04-21 11:53 GMT   |   Update On 2021-04-21 11:53 GMT
சேந்தமங்கலம் அருகே வாகனம் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேந்தமங்கலம்:

சேந்தமங்கலம் அருகே உள்ள துத்திக்குளம் இந்திரா காலனியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 55). கூலித்தொழிலாளி. இவருக்கு காந்திமதி என்ற மனைவியும், 3 மகன், 3 மகள்களும் உள்ளனர். காந்திமதி துத்திக்குளம் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் ராமகிருஷ்ணன் நேற்று முன்தினம் இரவு துத்திக்குளம் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு அவர் பலத்த காயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் ராமகிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராமகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News