வழிபாடு
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்

Published On 2021-12-14 05:27 GMT   |   Update On 2021-12-14 05:27 GMT
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தையொட்டி 1,008 சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாக புனித நீர் அடங்கிய குடங்களும், சங்குகளும் வைத்து சிறப்பு யாகம் நடந்தது. பின்னர் புனித நீர் அடங்கிய குடங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சாமிக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது.

இதில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கலந்துகொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். மேலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News