ஆன்மிகம்
வடுகபாளையம் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தபோது எடுத்தபடம்.

வடுகபாளையத்தில் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

Published On 2020-11-28 06:53 GMT   |   Update On 2020-11-28 06:53 GMT
கருமத்தம்பட்டி அடுத்த கிட்டாம்பாளையம் ஊராட்சி வடுகபாளையத்தில் உள்ள ராஜவிநாயகர், சக்தி மாரியம்மன், மாகாளியம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்தது.
கருமத்தம்பட்டி அடுத்த கிட்டாம்பாளையம் ஊராட்சி வடுகபாளையத்தில் உள்ள ராஜவிநாயகர், சக்தி மாரியம்மன், மாகாளியம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஊர் முக்கிய பிரமுகர்களான அமாவாசை கவுண்டர், ஆறுமுகம், ஆகியோர் தலைமையில் கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து 4 கால வேள்வி பூஜைகளும், பிறகு ராஜ விநாயகர், சக்தி மாரியம்மன், மகாளியம்மன் கோவில்களின் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் வி.பி கந்தசாமி எம்.எல்.ஏ., மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் வி.எம்.சி மனோகரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சாந்திமதி தோப்பு அசோகன், சூலூர் ஒன்றியக்குழு தலைவர் மாதப்பூர் பாலு, கிட்டாம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் வி.எம்.சி சந்திரசேகர், கூட்டுறவு வேளாண்மை சங்கத் தலைவர் ராக்கியப்பன் உள்பட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News