வழிபாடு
ஆவாரங்காடு அக்னி மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலம்

ஆவாரங்காடு அக்னி மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலம்

Published On 2022-04-01 08:01 GMT   |   Update On 2022-04-01 08:01 GMT
புதன்சந்தைப்பேட்டை பகுதியில் இருந்து ஆண், பெண் பக்தர்கள் காவிரி ஆற்றில் குளித்துவிட்டு 15 முதல் 20 அடி நீளம் உள்ள அலகை கன்னத்தில் குத்திக்கொண்டு ஊர்வலமாக வந்தனர்.
பள்ளிபாளையம் ஆவாரங்காடு பகுதியில் உள்ள ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினந்தோறும் அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள், பூஜைகள் நடந்து வருகிறது.

விழாவில் நேற்று காலை புதன்சந்தைப்பேட்டை பகுதியில் இருந்து ஆண், பெண் பக்தர்கள் காவிரி ஆற்றில் குளித்துவிட்டு 15 முதல் 20 அடி நீளம் உள்ள அலகை கன்னத்தில் குத்திக்கொண்டு ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலம் ஒட்டமெத்தை, பைபாஸ் ரோடு, பஸ் நிலைய ரோடு, ஆர்.எஸ். ரோடு வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது.

ஊர்வலத்தில் ஆண்கள், பெண்கள் என 50-க்கும் மேற்பட்டோர் அலகு குத்தி வந்தனர். சில பக்தர்கள் முதுகில் அலகு குத்தி கார் மினி டெம்போ இழுத்து வந்தனர். பின்னர் அனைவருக்கும் கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News