ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் உறியடி உற்சவம்11-ந் தேதி நடக்கிறது

Published On 2020-09-08 06:49 GMT   |   Update On 2020-09-08 06:49 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா வருகிற 10-ந்தேதியும், உறியடி உற்சவம் 11-ந் தேதியும் நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா வருகிற 10-ந்தேதியும், உறியடி உற்சவம் 11-ந் தேதியும் நடைபெறுகிறது. கிருஷ்ணர் ஜெயந்தி விழாவின் முதல் நாளான 10-ந் தேதி மூலவர் ரெங்கநாதர் விஸ்வரூப சேவை காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரையும், பொது ஜனசேவை காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணிவரையும், மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணிவரையும் நடைபெறும்.

மாலை 5.30 மணிக்கு மேல் மூலவர் ரெங்கநாதர் சேவை கிடையாது. 2-ம் நாளான 11-ந் தேதி விஸ்வரூப சேவை கிடையாது. மூலவர் ரெங்கநாதரை காலை 7.30 மணி முதல் மதியம் 12.30 மணிவரையும், மதியம் 1.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் பொதுமக்கள் தரிசனம் செய்யலாம். மாலை 5.30 மணிக்கு மேல் மூலவர் ரெங்கநாதர் சேவை கிடையாது. மேற்கண்ட தகவலை கோவில் இணைஆணையர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News