ஆட்டோமொபைல்
ராயல் என்பீல்டு புல்லட் 350

இந்தியாவில் புதிய நிறத்தில் அறிமுகமான புல்லட் 350

Published On 2021-02-02 07:14 GMT   |   Update On 2021-02-02 07:14 GMT
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புல்லட் 350 மோட்டார்சைக்கிள் புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


ராயல் என்பீல்டு நிறுவனம் தனது புல்லட் 350 மோட்டார்சைக்கிளை பாரஸ்ட் கிரீன் எனும் புதிய நிறத்தில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ராயல் என்பீல்டு புல்லட் 350 பாரஸ்ட் கிரீன் விலை ரூ. 1.33 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய நிறம் புல்லட் 350 ஸ்டான்டர்டு வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது. இது பிளாக், ஆனிக்ஸ் பிளாக் மற்றும் புல்லட் சில்வர் போன்ற நிற வேரியண்ட்களுடன் விற்பனை செய்யப்படுகிறது. புல்லட் இஎஸ் வேரியண்ட்டில் இந்த நிறம் வழங்கப்படவில்லை.



பாரஸ்ட் கிரீன் நிறம் தவிர இந்த மோட்டார்சைக்கிளில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தியாவில் புல்லட் 350 அதிக பிரபலமான மாடலாக இருந்து வருகிறது. முன்னதாக புல்லட் 350 மாடல் கடந்த ஆண்டு துவக்கத்தில் அப்டேட் செய்யப்பட்டு பிஎஸ்6 விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் வழங்கப்பட்டது.

அந்த வகையில் இந்த மாடலில் 346சிசி, சிங்கில் சிலிண்டர் ஏர் கூல்டு யூனிட் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 19.1 பிஹெச்பி பவர், 28 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News