உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

வெள்ளகோவிலில் புகையிலை விற்ற 2 பேர் கைது

Published On 2022-05-05 08:22 GMT   |   Update On 2022-05-05 08:22 GMT
அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு கேடு விளைவிக்கக்கூடிய புகையிலை பொட்டலம் வைத்திருந்தனர்.
வெள்ளகோவில்:

வெள்ளகோவிலில் நேற்று காலை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, முத்தூர் ரோட்டில் உள்ள மளிகை மற்றும் பெட்டி கடைகளை சோதனையிட்டதில் வீரப்பகவுண்டர் மகன் கார்த்திகேயன், பழனிச்சாமி மகன் அருண்பிரகாஷ் ஆகிய இருவரும் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு கேடு விளைவிக்கக்கூடிய புகையிலை பொட்டலம் வைத்திருந்தனர். 

இதையடுத்து இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த புகையிலை பொட்டலத்தை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News