செய்திகள்
கொரோனா வைரஸ்

நாகை மாவட்டத்தில் மேலும் 78 பேருக்கு கொரோனா

Published On 2021-04-18 11:13 GMT   |   Update On 2021-04-18 11:13 GMT
நாகை மாவட்டத்தில் நேற்று மேலும் 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 925 ஆக உயர்ந்துள்ளது.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டத்தில் நேற்று மேலும் 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 925 ஆக உயர்ந்துள்ளது. 102 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 9 ஆயிரத்து 604 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,165 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 479 ஆக உயர்ந்துள்ளது. 85 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 12 ஆயிரத்து 515 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 847 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் 313 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தஞ்சை மாவட்டத்தில் நேற்று மேலும் 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 92 ஆக உயர்ந்துள்ளது. கும்பகோணம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 68 வயது முதியவர் உயிரிழந்தார்.
Tags:    

Similar News