செய்திகள்
5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-
வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் சுழற்சி காரணமாகவும், கீழடுக்கில் கிழக்கு திசை காற்றில் சுழற்சி காரணமாகவும் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளையும், நாளை மறு தினமும் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோத்தகிரியில் 9 செ.மீ. மழை பெய்துள்ளது. குன்னூரில் 7 செ.மீட்டரும், சோத்துபாறையில் 6 செ.மீட்டர் மழையும் பெய்துள்ளது.
சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-
வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் சுழற்சி காரணமாகவும், கீழடுக்கில் கிழக்கு திசை காற்றில் சுழற்சி காரணமாகவும் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளையும், நாளை மறு தினமும் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோத்தகிரியில் 9 செ.மீ. மழை பெய்துள்ளது. குன்னூரில் 7 செ.மீட்டரும், சோத்துபாறையில் 6 செ.மீட்டர் மழையும் பெய்துள்ளது.