செய்திகள்
மம்தா பானர்ஜி

‘ஒரே நாடு’ என்று பேசும் பா.ஜனதா தடுப்பூசிக்கு ஒரே விலையை நிர்ணயிக்காதது ஏன்? - மம்தா பானர்ஜி கேள்வி

Published On 2021-04-22 22:12 GMT   |   Update On 2021-04-22 22:12 GMT
ஒரே நாடு, ஒரே கட்சி, ஒரே தலைவர் என்று பேசும் பா.ஜனதா, மக்களின் உயிரை காப்பாற்றும் தடுப்பூசிக்கு ஒரே விலையை நிர்ணயிக்க முடியாதா? என முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஒரே நாடு, ஒரே கட்சி, ஒரே தலைவர் என்று பா.ஜனதா எப்போது பார்த்தாலும் கூச்சலிடுகிறது. ஆனால், மக்களின் உயிரை காப்பாற்றும் தடுப்பூசிக்கு ஒரே விலையை நிர்ணயிக்க முடியாதா?



வயது, சாதி, இனம், இருப்பிடம் எதுவாக இருந்தாலும் இலவச தடுப்பூசி பெற ஒவ்வொரு இந்தியனுக்கும் உரிமை உள்ளது. ஆகவே, தடுப்பூசிக்கான விலையை மத்திய அரசு கொடுப்பதாக இருந்தாலும், மாநில அரசு கொடுப்பதாக இருந்தாலும் தடுப்பூசிக்கு ஒரே விலையை மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News