ஆன்மிகம்
அழகப்பபுரம் புனித அமல அன்னை சபை விழா
அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலயத்தில் புனித அமல அன்னை சபை விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு பங்குத்தந்தை செல்வராயர் தலைமையில் மாலை ஆராதனை நடந்தது.
அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலயத்தில் புனித அமல அன்னை சபை விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு பங்குத்தந்தை செல்வராயர் தலைமையில் மாலை ஆராதனை நடந்தது.
இதில் புதிதாக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு கழுத்தில் அணியும் அடையாள நாடா வழங்கப்பட்டது. நேற்று காலை 7 மணிக்கு உதவி பங்குத்தந்தை ரூபன் தலைமையில் விழா திருப்பலி நடந்தது. இதில் புனித அமல அன்னை சபை உறுப்பினர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.