செய்திகள்
கோப்புப்படம்

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 364 போலீசாருக்கு கொரோனா - 4 போலீசார் உயிரிழப்பு

Published On 2020-09-17 19:17 GMT   |   Update On 2020-09-17 19:22 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 364 போலீசார் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
மும்பை:

கொரோனா பாதிப்பில் முதலிடம் வகிக்கும் மகாராஷ்டிராவில், போலீசாரும் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தநிலையில் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 364 போலீசார் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு ஆளான போலீசாரின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்தது. இதுவரை 20 ஆயிரத்து 367 பேர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் 2 ஆயிரத்து 218 பேர் அதிகாரிகள் ஆவர்.மேலும் ஒரே நாளில் 4 போலீசார் பலியானதால், கொரோனாவுக்கு உயிரிழந்த போலீசாரின் எண்ணிக்கை 208 ஆக அதிகரித்து உள்ளது.

இதற்கிடையே நோய் தொற்றில் இருந்து 16 ஆயிரத்து 363 போலீசார் மீண்டு உள்ளனர். இன்னும் 3 ஆயிரத்து 796 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News