தோஷ பரிகாரங்கள்
பால் குடம்

காரியங்கள் வெற்றியாகும் பரிகாரம்

Published On 2022-01-13 05:59 GMT   |   Update On 2022-01-13 05:59 GMT
நம்மை சுற்றி இருப்பவர்கள் வெள்ளை மனதுடையவர்களாக இருந்தால், நாம் செய்யும் காரியங்கள் வெற்றியாகும் என்பதற்காக செய்யும் பரிகாரம் இது.
மனிதர்கள் ஒவ்வொருவரும் நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும், வெற்றியாக முடிவடைய வேண்டுமென்று ஆண்டவனை வேண்டி பல்வேறு விதமான நேர்த்திக்கடனும் செலுத்துகிறார்கள்.

அதில் பால்குடம் எடுப்பதும் ஒன்று. பால் வெள்ளை நிறமானது. நம்மை சுற்றி இருப்பவர்கள் வெள்ளை மனதுடையவர்களாக இருந்தால், நாம் செய்யும் காரியங்கள் வெற்றியாகும் என்பதற்காக செய்யும் பரிகாரம் இது.

மேலும் தெய்வங்களை அபிஷேகத்தால் குளிர்ச்சிப்படுத்தினால் அவர்களின் மனம் குளிரும். அதற்காகத்தான் பால் அபிஷேகம் செய்கிறோம்.

இந்த தைப்பூச நாளில் விரதம் இருந்து பால் குடம் எடுத்தால் வேண்டுதல்கள் நிறைவேறும்.
Tags:    

Similar News