செய்திகள்
வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு

காரைக்காலில் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு

Published On 2021-04-27 03:14 GMT   |   Update On 2021-04-27 03:14 GMT
காரைக்கால் மாவட்டத்தில் வருகிற 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதையொட்டி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்காக முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.
காரைக்கால்:

காரைக்கால் மாவட்டத்தில் நடந்து முடிந்த 5 சட்டமன்ற தொகுதி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள், காரைக்கால் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு வருகிற 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதையொட்டி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்காக முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அர்ஜூன் சர்மா ஆய்வு செய்தார். அப்போது அங்கு கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

ஆய்வின் போது தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஆதர்ஷ், சுபாஷ், துணை மாவட்ட தேர்தல் அதிகாரி பாஸ்கரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News