உள்ளூர் செய்திகள்
4 வாலிபர்கள் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் கைது

Published On 2022-05-07 10:08 GMT   |   Update On 2022-05-07 10:08 GMT
மதுரையில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மதுரை

மதுரை கரிமேடு மோதிலால் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தங்கராஜ் (35). இவர் மேலப்பொன்னகரம் மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அங்குவந்த 2 பேர் கத்தியைகாட்டி மிரட்டி 1,400 ரூபாயை பறித்துச் சென்றார். 

இதுகுறித்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து வந்து காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர்.  அவர்கள் மஞ்சள்மேடு காலனி, அன்னை இந்திரா நகர், ஜீவா மணி என்ற தீப்பெட்டி (19), ஆரப்பாளையம் கண்மாய்க்கரை சகாயமாதா தெரு அஜய் பிரசன்னா என்ற குட்டி சாக்கு (23) என்பது தெரியவந்தது. அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். 2 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர். 

கருமாத்தூர், தவசி காலனியை சேர்ந்தவர் பாண்டி (59). இவர் அய்யர் பங்களா- புதுநத்தம் ரோடு ஒயின் ஷாப் அருகே நடந்து சென்றார். அங்கு வந்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 2 ஆயிரத்தை பறித்து சென்றனர்.  இதுகுறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

 அவர்கள் பீ.பி.குளம், நேதாஜி மெயின்ரோடு, செல்லபாண்டியன் ஜோதிபாசு (19), பீ.பி.குளம் காந்திஜிதெரு கோகுல் விஜய் (28) என்பது தெரியவந்தது. அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

மதுரை முனிச்சாலை இஸ்மாயில்புரத்பதைச் சேர்ந்தவர் ஜாகீர் (38). இவர் பாலமேடு மெயின்ரோடு பகுதியில் நடந்துசென்றார். அங்கு வந்த வாலிபர் கத்திமுனையில் 500 ரூபாயை பறித்துச்சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில்  கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னசொக்கிகுளம் ஜோசப் சாமுவேல் என்ற கேரளா (21) என்பவரை கைதுசெய்தனர். 


Tags:    

Similar News