உள்ளூர் செய்திகள்
பண்ருட்டி அருகே பிணமாக கிடந்த மூதாட்டி
பண்ருட்டி அருகே மூதாட்டி பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே காடாம்புலியூர் போலீஸ் சரகம்தெற்கு சாத்திப்பட்டு கிராமத்தில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதாட்டி ஒருவர் இறந்த நிலையில் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூவராகவன் பிணத்தை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.