லைஃப்ஸ்டைல்
காலிஃப்ளவர் சூப்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காலிஃப்ளவர் சூப்

Published On 2020-11-18 04:58 GMT   |   Update On 2020-11-18 04:58 GMT
காலிஃப்ளவரை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஊட்டச்சத்து அதிகம் கொண்ட காலிஃப்ளவரை, உணவில் சேர்த்துக் கொள்வதால், உடலை தாக்கும் புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் பல்வேறு தொற்று நோய் மற்றும் மன அழுத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள முடியும்.

தேவையான பொருட்கள்

துருவிய காலிஃப்ளவர் - ஒரு கப்
காலிஃப்ளவர் தண்டு - அரை கப்
கோதுமை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
வெங்காயம் - ஒன்று
பால் - ஒரு கப்
மிளகுத்தூள் - சிறிதளவு
பூண்டு - 5 பல்
நெய் அல்லது வெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :

முதலில் காலிஃப்ளவர் தண்டு, பூண்டு, வெங்காயத்தை மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

கடாயில் சிறிதளவு நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து, அடுப்பை குறைந்த தீயில் வைத்து, துருவிய காலிஃப்ளவரை வதக்கி உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் புரட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

கடாயில் நெய் அல்லது வெண்ணெய் விட்டு, அரைத்த விழுதை சேர்த்துப் புரட்டி, கோதுமை மாவை போட்டுக் கிளறவும்.

2 நிமிடங்கள் கழித்து ஒரு கப் நீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். வதக்கி வைத்துள்ள காலிஃப்ளவர் கலவையை இதில் சேர்த்துக் கொதிக்கவிட்டு, பால் சேர்த்துக் கிளறி, அடுப்பை அணைக்கவும்.

சத்தான காலிஃப்ளவர் சூப் ரெடி.

இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
Tags:    

Similar News