செய்திகள்
ஊரடங்கால் வெறிச்சோடிய சாலை

கேரளாவில் 4 மாவட்டங்களில் மும்மடங்கு ஊரடங்கு... நாளை நள்ளிரவு முதல் கடும் கட்டுப்பாடுகள்

Published On 2021-05-15 15:28 GMT   |   Update On 2021-05-15 15:28 GMT
கேரளாவில் இன்று ஒரே நாளில் 32680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், திருவனந்தபுரம், எர்ணாகுளம், திரிச்சூர் மற்றும் மலப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் பாதிப்பு கடுமையாக உள்ளது. எனவே, ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்க அரசு முடிவு செய்தது. அதன்படி இந்த 4 மாவட்டங்களிலும் 17ம்தேதி முதல் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுகின்றன.

இதுதொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், திருவனந்தபுரம், எர்ணாகுளம், திரிச்சூர் மற்றும் மலப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை நள்ளிரவு முதல் மும்மடங்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும். கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படும், என்றார்.

கேரளாவில் இன்று ஒரே நாளில் 32680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4.45 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Tags:    

Similar News