செய்திகள்
கொரோனா பரிசோதனை

மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 2,936 பேருக்கு கொரோனா தொற்று: 50 பேர் பலி

Published On 2021-01-12 15:06 GMT   |   Update On 2021-01-12 15:06 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 2,936 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்று பெருமளவு குறைந்த போதிலும் கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்னும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 2,936 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3,282 பேர் குணமடைந்துள்ளனர். ஆனால் கவலை அளிக்கும் விதமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை மகாராஷ்டிரா மாநிலத்தில் 19,74,488 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 18,71,270 பேர் குணமடைந்துள்ளனர். 50,151 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது வரை சிகிச்சை பெறுவோர் மற்றும் கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 51,892 ஆக உள்ளது.
Tags:    

Similar News