செய்திகள்
ஜெயலலிதா

ஜெயலலிதா நினைவு நாள்: மதுரையில் அமைதி பேரணி-புகழ் அஞ்சலி

Published On 2019-12-04 11:39 GMT   |   Update On 2019-12-04 11:39 GMT
மதுரையில் நாளை மாலை ஜெயலலிதா நினைவு அமைதி பேரணி அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெறுகிறது.
மதுரை:

மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் 3-ம் ஆண்டு நினைவு தினம் நாளை (வியாழக்கிழமை)அனுஷ்டிக்கப்படுகிறது.

இதையொட்டி மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அமைதி பேரணி மற்றும் புகழ் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நாளை மாலை 4 மணி அளவில் மதுரை கட்டபொம்மன் சிலை அருகில் அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் அமைதி பேரணியாக புறப்படுகிறார்கள்.

அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் புறப்படும் இந்த அமைதி பேரணி திண்டுக்கல் ரோடு வழியாக மேலமாசி வீதி, வடக்குமாசி வீதி சந்திப்பு சென்றடைந்ததும் அங்கு ஜெயலலிதாவுக்கு புகழ் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் இன்னாள், முன்னாள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், அ.தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கழக முன்னோடிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்கிறார்கள்.

இந்த அமைதி பேரணியில் பங்கேற்க அனைவரும் திரண்டு வரும்படி அமைச்சர் செல்லூர் ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News