செய்திகள்
திருவெண்ணைநல்லூர் அருகே மின்சாரம் தாக்கி டாஸ்மாக் கடை ஊழியர் பலி
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்த டாஸ்மாக் கடை ஊழியர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவெண்ணைநல்லூர்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சரவணப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 45). இவர் ஆமூர் குப்பம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று வழக்கம் போல் டாஸ்மாக் கடையில் வேலை முடிந்த பிறகு குமார் வீட்டுக்கு புறப்பட்டார். வீட்டுக்கு வந்த குமார் தொட்டியில் தண்ணீர் இல்லாததால் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றுவதற்காக மின் மோட்டாரின் ஸ்வீட்சை ஆன் செய்தார்.
அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட குமார் பலத்த காயம் அடைந்தார். குமாரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் குமார் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து திருவெண்ணை நல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சரவணப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 45). இவர் ஆமூர் குப்பம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று வழக்கம் போல் டாஸ்மாக் கடையில் வேலை முடிந்த பிறகு குமார் வீட்டுக்கு புறப்பட்டார். வீட்டுக்கு வந்த குமார் தொட்டியில் தண்ணீர் இல்லாததால் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றுவதற்காக மின் மோட்டாரின் ஸ்வீட்சை ஆன் செய்தார்.
அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட குமார் பலத்த காயம் அடைந்தார். குமாரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் குமார் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து திருவெண்ணை நல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.