செய்திகள்
கண்களை கவரும் ஆகாஷ் அம்பானி-ஷ்லோகா மேத்தா திருமண அழைப்பிதழ்
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழ் காண்போர் கண்ணை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. #AkashAmbaniMarriage #Invitation
புதுடெல்லி:
பின்னர் இந்த நட்பு காதலாக மாறி, திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. அடுத்த மாதம் 10ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதையடுத்து உலகின் பல தலைவர்களுக்கும் முகேஷ் அம்பானி- நீதா அம்பானி தம்பதி அழைப்பு விடுத்து வருகின்றனர்.
அழகிய சிவப்பு நிற பெட்டகம் ஒன்றின், மேல்பகுதியில் சூரிய உதயத்தில் பறவைகள் பறக்க , மயில்கள் நடனமாட, மலர்கள் பூத்துக்குலுங்கும் வனத்தின் நடுவே உள்ள மண்டபத்தில் ராதா கிருஷ்ணர் இருப்பதை போன்று அமைக்கப்பட்டுள்ளது. இப்பெட்டகத்தின் அடிப்பகுதி முல்லை மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்த பெட்டகத்தினை திறந்த பின்னர் சிறு சிறு பகுதிகளாக மேலும் ஒரு ராதா கிருஷ்ணர் படம் வெள்ளியினால் ஆன ஃப்ரேம் போடப்பட்டுள்ளது. அதனையடுத்து ஆரஞ்சு நிறத்தில் கார்டு ஒன்று மணமக்களுக்கான வாழ்த்துச் செய்தியுடன் இருக்கிறது. இதில் ‘சூரிய தேவனே, நீயே எங்கள் ஆகாஷின் ஒளி, எங்கள் ஒவ்வொரு ஷ்லோகாவிற்குள்ளும் நீங்களே பிரகாசிக்கிறீர்கள்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்து ராஜ அலங்காரத்தில் இருக்கும் விநாயகரின் உருவம் உள்ளது. இறுதியாக மணமக்கள் பெயர் தாங்கிய கார்டு ஒன்று, முகேஷ் அம்பானி-நீதா அம்பானி தம்பதியின் அழைப்பு கடிதத்துடன் சேர்ந்து உள்ளது.
ஆகாஷ் அம்பானி-ஷ்லோகா மேத்தா திருமணம், மும்பையில் உள்ள பந்த்ரா குர்லா வளாகத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #AkashAmbaniMarriage #Invitation
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி மற்றும் வைர வியாபாரியான ரஸ்ஸல் மேத்தாவின் மகள் ஷ்லோகா மேத்தா இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்களாக இருந்தனர்.
பின்னர் இந்த நட்பு காதலாக மாறி, திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. அடுத்த மாதம் 10ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதையடுத்து உலகின் பல தலைவர்களுக்கும் முகேஷ் அம்பானி- நீதா அம்பானி தம்பதி அழைப்பு விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆகாஷ் அம்பானி-ஷ்லோகா மேத்தா ஆகியோரின் திருமண அழைப்பிதழ்களின் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.
அழகிய சிவப்பு நிற பெட்டகம் ஒன்றின், மேல்பகுதியில் சூரிய உதயத்தில் பறவைகள் பறக்க , மயில்கள் நடனமாட, மலர்கள் பூத்துக்குலுங்கும் வனத்தின் நடுவே உள்ள மண்டபத்தில் ராதா கிருஷ்ணர் இருப்பதை போன்று அமைக்கப்பட்டுள்ளது. இப்பெட்டகத்தின் அடிப்பகுதி முல்லை மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்த பெட்டகத்தினை திறந்த பின்னர் சிறு சிறு பகுதிகளாக மேலும் ஒரு ராதா கிருஷ்ணர் படம் வெள்ளியினால் ஆன ஃப்ரேம் போடப்பட்டுள்ளது. அதனையடுத்து ஆரஞ்சு நிறத்தில் கார்டு ஒன்று மணமக்களுக்கான வாழ்த்துச் செய்தியுடன் இருக்கிறது. இதில் ‘சூரிய தேவனே, நீயே எங்கள் ஆகாஷின் ஒளி, எங்கள் ஒவ்வொரு ஷ்லோகாவிற்குள்ளும் நீங்களே பிரகாசிக்கிறீர்கள்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்து ராஜ அலங்காரத்தில் இருக்கும் விநாயகரின் உருவம் உள்ளது. இறுதியாக மணமக்கள் பெயர் தாங்கிய கார்டு ஒன்று, முகேஷ் அம்பானி-நீதா அம்பானி தம்பதியின் அழைப்பு கடிதத்துடன் சேர்ந்து உள்ளது.
ஆகாஷ் அம்பானி-ஷ்லோகா மேத்தா திருமணம், மும்பையில் உள்ள பந்த்ரா குர்லா வளாகத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #AkashAmbaniMarriage #Invitation