செய்திகள்
வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம்

சர்க்கரை அட்டைதாரர்கள் அரிசி ரேஷன் கார்டாக மாற்ற 20-ந் தேதி கடைசி நாள் - கலெக்டர் தகவல்

Published On 2020-12-13 12:56 GMT   |   Update On 2020-12-13 12:56 GMT
சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்கள் அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்ற 20-ந் தேதி கடைசி நாள் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
வேலூர்:

வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்கள் அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்திட உணவுத்துறை அமைச்சரால் கடந்த 5-ந் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டைகளை அரிசி விருப்ப குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால் அதற்கான விண்ணப்பங்களை குடும்ப அட்டையின் நகலை இணைத்து வருகிற 20-ந் தேதிக்குள் www.tnpds.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலரிடமோ நேரில் விண்ணப்பித்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News