செய்திகள்
கோப்பு படம்

குடும்ப தகராறில் மோதல் - மனைவி உள்பட 2 பெண்களை தாக்கிய வாலிபர் கைது

Published On 2019-11-07 10:47 GMT   |   Update On 2019-11-07 10:47 GMT
ஆண்டிப்பட்டி அருகே குடும்ப தகராறில் மனைவி உள்பட 2 பெண்களை தாக்கிய வாலிபரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள அமச்சியாபுரம் அய்யனார்புரத்தை சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மகள்கள் கவிபாலா(27), கார்த்திகா(25). கார்த்திகாவுக்கும், குன்னூரை சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண்குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவர்கள் கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்திகா தரப்பினருக்கும், முருகானந்தம் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதுதொடர்பாக க.விலக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கவி பாலாவும், கார்த்திகாவும் கைது செய்யப்பட்டனர். பின்பு நிபந்தனை ஜாமீனில் வந்த அவர்கள் ஆண்டிப்பட்டி கோர்ட்டில் கையெழுத்து போட்டு வருகின்றனர். நேற்று கவிபாலாவும், கார்த்திகாவும் ஆண்டிப்பட்டி கோர்ட்டில் கையெழுத்து போட்டுவிட்டு வீடு திரும்பினர்.

ஆண்டிப்பட்டி-தேனி சாலையில் எஸ்.எஸ்.புரம் விலக்கு வந்தபோது முருகானந்தம், அவரது சகோதரி பிரியங்கா, தாய் தமிழ்ச்செல்வி, உறவினர் காளியப்பன், அவரது மனைவி செல்லத்தாய், முருகானந்தம் சகோதரர் லோகதாஸ் ஆகியோர் வழிமறித்தனர். பின்பு கவிபாலாவையும், கார்த்திகையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுபற்றி கவிபாலா ஆண்டிப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து முருகானந்தத்தை கைது செய்தனர். தொடர்ந்து இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News