ஆன்மிகம்
நன்செய்இடையாறு மாரியம்மன் கோவிலில் தீ மிதி‌ விழா கம்பம் ‌நடுதலுடன் தொடங்கியது

நன்செய்இடையாறு மாரியம்மன் கோவிலில் தீ மிதி‌ விழா கம்பம் ‌நடுதலுடன் தொடங்கியது

Published On 2021-03-09 06:38 GMT   |   Update On 2021-03-09 06:38 GMT
பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய்இடையாறில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தீ மிதி விழா கம்பம் நடுதலுடன் தொடங்கியது.
பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய்இடையாறில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தீ மிதி விழா கம்பம் நடுதலுடன் தொடங்கியது. இதில் நாமக்கல், ஈரோடு, கரூர், சேலம் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவில் முன்பு நடப்பட்ட கம்பத்திற்கும், மாரியம்மனுக்கும் பால் மற்றும் தீர்த்தங்களால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். பின்னர் தீ மிதிக்கும் ஆண் பக்தர்களும், பூவாரி போட்டுக்கொள்ளும் பெண் பக்தர்களும் காப்புக்கட்டி 15 நாட்கள் விரதத்தை தொடங்கினர். வருகிற 14-ந் தேதி இரவு மறுகாப்பு கட்டுதலும், 21-ந் தேதி வடிசோறு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதி விழா 22-ந் தேதி நடக்கிறது. 23-ந் தேதி கிடா வெட்டுதல் மற்றும் மாவிளக்கு பூஜையும், 24-ந் தேதி காலை கம்பம் பிடுங்கி ஆற்றில் விடும் நிகழ்ச்சியும், மாலை மஞ்சள் நீராட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர், விழாக்குழுவினர் மற்றும் எட்டுப்பட்டி ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர். பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தும் குண்டம் 62 அடி நீளமுள்ளது என்பதும், தமிழகத்திலேயே இந்த குண்டம் தான் அதிக நீளம் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News