செய்திகள்
தேனி அருகே பெண்ணை ஆசைக்கு இணங்க அழைத்தவருக்கு அடி-உதை
தேனி அருகே ஆசைக்கு பெண்ணை அழைத்த வாலிபரை தாக்கிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே உள்ள உப்புக்கோட்டை காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பூமிநாதன் மகன் கிதியோன் (வயது 24). இவர் அதே பகுதியைச் சேர்ந்த டேனியல் மனைவி விஜயாவை ஆசைக்கு இணங்க வருமாறு அழைத்துள்ளார்.
இது குறித்து விஜயா தனது கணவரிடம் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த விஜயாவின் உறவினர்கள் விஜயகுமார், பாண்டியன், தனபாண்டி, சதீஸ், லிங்கம்மாள், பார்த்திபன், சந்திரன், தினேஷ், செல்வம் ஆகியோர் சேர்ந்து கிதியோனை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
படுகாயமடைந்த அவர் க.விலக்கு போலீஸ் நிலையத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இது குறித்து வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மலரம்மாள் வழக்குபதிவு செய்து 9 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.